இலங்கை

14 வயது சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்ற இளைஞன்!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற காதலனை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமீலா குமாரி ரத்நாயக்க இன்று (7) உத்தரவிட்டார்.

காசிம்நகர், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான குறித்த இளைஞன் குச்சவெளி புடவைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், சிறுமியின் பெற்றோர் குறித்த இளைஞர் மீது மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குச்சவெளி பொலிஸார் இளைஞனை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker