ஆலையடிவேம்பு

பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் ரூபா இரண்டு லட்சம் பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஆண்கள் விடுதியின் மலசலகூடம் பழைமையானதாகவும் பாவனைக்கு உகந்த தற்றதாகவும் இருந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சந்திரசேகரம் மற்றும் செயலாளர் திரு. மணிவண்ணன் அவர்களின் முயற்சியால் அகில இலங்கை இந்துமாமன்ற அமைப்பினருடன் கலந்துரையாடி ரூபா இரண்டு லட்சம் பணம்  அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

குறித்த பணத்தின் மூலமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஆண்கள் விடுதியின் மலசலகூடத்திற்கான நிலத்திற்குத் தேவையான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் மேலதிகமாக அபிவிருத்திக்குழுவின் அன்பளிப்புகள் மூலம் சேர்ந்த கையிருப்புப் பணம் ஐம்பதாயிரம் கொண்டு மலசலகூட வேலைகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker