இலங்கை

தாதியர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த இளைஞன் விளக்கமறியலில்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியிலுள்ள தனியார் மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் தாதியர் ஒருவர் மீது பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த இளைஞன் ஒருவனை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (19) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மருத்துவ ஆய்வுகூட நிலையம் ஒன்றில் நேற்று (18) அதிகாலை 6 மணிக்கு இரத்த பரிசோதனைக்கு சென்ற 27 வயதுடைய இளைஞன் இரத்தத்தை பரிசோதனைக்காக ஊசிமூலம் எடுத்த பெண் தாதியர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தாதியர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த இளைஞனை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker