இலங்கை

மருதமுனை- 3 கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது

கல்முனை – மருதமுனை, 3 கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிரோஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் அவசர கூட்டமொன்று நடத்தப்பட்டது.

குறித்த கூட்டத்தில் மருதமுனை- 3 கிராம சேவகர் பிரிவினை உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, சுகாதார துறையினரோடு இணைந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தவகையில் மஸூர் மெளலானா வீதியின் தெற்கு பக்கமாக இருந்து சம்ஸம் வீதி, மக்காமடி வீதி, ஹிஜ்ரா வீதி, இஸ்லாம் நகர், பொது நூலக வீதியின் வடக்கு பக்கம் ஆகிய வீதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker