இலங்கை
சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டியற்ற கொடுப்பனவு – சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்

அரசாங்கத்தால் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் 10,000 ரூபாய் முற்கொடுப்பனவு, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சகலருக்கும் வழங்கப்படுமென, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமுரத்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் இந்த முற்கொடுப்பனவுக்கு வட்டி அறவிடப்படமாட்டாதெனவும் 18 மாதங்களில் இதனை மீள செலுத்த முடியுமெனவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.