இலங்கை

நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் சுகாதார அட்டை : சுகாதார அமைச்சின் அறிவிப்பு!!

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட தனிநபர்களுக்கான டிஜிட்டல் அட்டை வழங்கும் செயற்பாடுகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவித்தலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் முதல் வாரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 161,650 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை (நேற்றிரவு) 5,949,431 இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker