ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் பத்தாம் நாள் சங்காபிஷேகம்,பாற்குட பவனி,முலைப்பணித் திருவிழா,மாலை நகர் வலம் விழா …(13.09.2019) (படங்களும் இணைப்பு)

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள் புதன்கிழமை (04.09.2019) திருக்கொடியேற்றப் பெருவிழா அன்னதான நிகழ்வு இரவுநேர திருவிழா என முதலாம் நாளுக்கான நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

நேற்றய (13.09.2019) பத்தாம் நாளுக்கான காலை நிகழ்வு காலை 08.00 மணியளவில் பாற்குட பவனி கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பக்த அடியார்கள் பக்தி பரவசத்துடன் ஸ்ரீ முருகன் ஆலயத்தை சிறப்பாக வந்தடைந்தது கிரியைகள் இடம்பெற்றது.

மேலும் சங்காபிஷேகம்,முலைப்பணித் திருவிழா அதனைத்தொடர்ந்து மாலை நகர் வலம் என்பன ஆலையடிவேம்பு பொதுமக்களின் பங்களிப்புடன் ஆலயத் தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் கிரியைகள் சிவ ஸ்ரீ புண்யகிருஷ்ண குமார குருக்கள் அவர்களினாலும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker