இலங்கை

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி, வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தவறான விமர்சனங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரொனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீள சரிசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker