ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைப்பு!

வி.சுகிர்தகுமார்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கும் வழிகாட்டலுக்கும் அமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக (அக்கரைப்பற்று தெற்கு) பிரிவுகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் முகமாக இலவச ஆயுர்வேத மூலிகை பானமானது (ஜோசான்ட்) இன்று வழங்கி வைக்கப்பட்டது.

சுதேச ஆயுர்வேத மாகாண ஆணையாளர் வைத்தியர் ஆர்.சிறிதரின் ஆலோசனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனை வைத்தியர் ஜி.சுகுணன் மற்றும் கல்முனை பிராந்திய தொடர்பாளர், வைத்தியர் எம்.எ.நபீலின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு ஆயுர்வேத மத்திய மருந்தகம் பொறுப்பதிகாரி வைத்தியர் .த.குவிதாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலையடிவேம்பு சத்தோச முன்பாக ஆரம்பித்த நடமாடும் இச்சேவை பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker