ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டி பாரிய கையெழுத்து வேட்டை இன்று முதல்….

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு 5000 பேரின் கையெழுத்தை வேண்டிய கையெழுத்து வேட்டை தன்னார்வம் கொண்டவர்களால் இன்றைய தினம் முதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவு பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
இவ் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் வேண்டிய கையெழுத்து வேட்டை கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் பிரதேச சமூக அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் மற்றும் தன்னார்வம் கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற இருக்கின்றது.