இலங்கை

இலங்கையில் மேலும் 111 கொரோனா மரணங்கள் : ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்கள்!!

நாட்டில் மேலும் 111 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (08.08.2021) 111 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 முதல் 59 வயது வரையிலான 21 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 90 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 56 ஆண்களும் 55 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5222 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 495 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker