இலங்கை

தீப்பற்றிக் கொண்ட கப்பலினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழு

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்ட கப்பலினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, சமுத்திரவியல் தொடர்பான நிபுணர்களும், பல்கலைக்கழக கலாநிதிகளும் இந்தக் குழுவில் நியமிக்கப்படவிருக்கின்றனர்.

கடல்வாழ் உயிரினங்கள் உட்பட கடல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும்.

இதேவேளை, ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மாசைக் கணிப்பிட்டு நஷ்டஈடு பெறுவதற்கான சிபார்சையும் இந்தக் குழு முன்வைக்கும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker