இலங்கை

28 கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் மீண்டும் உக்ரேனிற்கு அனுப்பப்படும் – அமைச்சர் மஹிந்த

உக்ரேனிலிருந்து கொண்டு வரப்பட்ட 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், விவசாய கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் இந்த விடயத்தில் தவறு செய்தவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker