இலங்கை
எரிபொருட்களின் விலையில் மாற்றம்?

எரிபொருளின் விலையில் இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக ஒன்று கூடும் விலை சூத்திர குழுவானது இந்த மாதம் 10ஆம் திகதி விடுமுறை தினம் என்பதால் இன்றைய தினம் ஒன்று கூடியது.
இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய, கடந்த மாதம் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பு.
92 octane பெற்றோல் 2 ரூபாவாலும்
95 octane பெற்றோல் 4 ரூபாவாலும் சுப்பர் டீசல் 3 ரூபாவாலும் அதிகரிப்பு