விளையாட்டு
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக அபராதம்!

மேற்கிந்தியதீவுகள் அணிக்கு ஐ.சி.சி. போட்டிக் கட்டணத்திலிருந்து 80 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்து வீச வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
குறிப்பிட்ட கால அவகாசத்தை தாண்டி அந்த அணி 4 ஓவர்களை வீசியது.
இது குறித்து நடுவர்கள் அளித்த புகாரை அடுத்து சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் டேவிட் பூன் விசாரணை நடத்தி மேற்கிந்தியத்தீவுகள் அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளார்.