அக்கரைப்பற்று பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது….

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி எம்.எச். முகமட் ஹம்சா இன்று (13)கட்டளை இட்டார்.
கைது செய்யப்பட்ட இரண்டாம் சந்தேக நபரை இம்மாதம் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் நேற்யை தினம் (12) நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றிவளைப்பின்போதே முச்சக்கர வண்டி ஒன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 78 கிராமும்; 38 மில்லிகாரம் ஹொரொயின் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிசார் இன்று நீதிமன்றில் சமர்ப்பித்தபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.