இலங்கை

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்படுவோரை கண்டறியும் வகையில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (13) இரவு முதல் நாடளாவிய ரீதியில் பயணத் தடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளதுடன் மக்கள் நடமாட்டம் இல்லாததை காண முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான எந்த போக்குவரத்துகளும் நடைபெறாத நிலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையினை காண முடிகின்றது.

மருந்தகங்கள் மட்டும் இயங்கும் நிலையில் மக்கள் வருகையில்லாத காரணத்தினால் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதனை மீறுவோரை கண்டறியும் வகையில் படையினரும் பொலிஸாரும் இணைந்து விசேட வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தியாவசிய தேவை தவிர்ந்த வகையில் நடமாடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாகவுள்ள காரணத்தினால் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker