இலங்கை

திருக்கோவிலில் விபத்து – 12 பேர் காயம்!

திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker