ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை இல்லை!

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் (Kagoshima Prefecture) உள்ள தென்மேற்கு தீவுப் பகுதியான அமாமியில் (Amami) இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இதற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:46 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒகினாவா மாகாணத்தின் (Okinawa Prefecture) முக்கிய தீவுக் கடற்கரையிலிருந்து நிலத்தடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானின் 7 புள்ளிகள் கொண்ட நில அதிர்வு தீவிர அளவுகோலில் (Japanese seismic intensity scale), ககோஷிமா மாகாணத்தின் தெற்கு முனையில் உள்ள யோரோன் (Yoron) பகுதியில் இந்த நிலநடுக்கம் ‘உயர் 5’ (Upper 5) ஆகப் பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த அளவிலான நிலநடுக்கத்தின் போது:
இதேவேளை, அடுத்த ஒரு வாரத்திற்கு, குறிப்பாக அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள், இதேபோன்ற தீவிரத்துடன் மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



