இலங்கை

கொரோனா அச்சம் – 401 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 401 இலங்கையர்கள் மூன்று விமானங்களில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 50 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலை வாய்ப்புக்காகச் சென்ற 275 இலங்கையர்கள் இன்று அதிகாலை 5.40 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

மேலும் ஐ.நா. அமைதி காக்கும் படைகளில் பணியாற்றுவதற்காக பல்வேறு ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்ற 76 இலங்கை இராணுவ வீரர்களும் எத்தியோப்பிய ஏயர்லைன்ஸ் மூலமாக அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்.சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker