இலங்கை

சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறவுள்ள இலங்கை!

சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதன்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடனைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இன்றி 10 ஆண்டு காலப்பகுதியில் கடன் திருப்பிச் செலுத்தப்படவுள்ளது என்று திறைசேரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி கொரோனா சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் என்றும் கூறுப்படுகிறது.

11Shares

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker