இலங்கை

மத்திய வங்கி மோசடி குறித்து விசாரிப்பதில் அர்த்தமில்லை – வாசுதேவ

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனை விடுத்து குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக உடனடியாக வழக்குத்தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் (திங்கட்கிழமை) சோசலிச மக்கள் முன்னணி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிணைமுறி மோசடியில் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதும் அது தொடர்பாக தற்போதைய நிலை என்னவென யாருக்கும் தெரியாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியின் முன்னேற்றம் தொடர்பாக மாதாந்தம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்றும் தொடர்ந்து இதனை பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker