உலகம்

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டொக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டொக் உட்பட பல்வேறு செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா அவற்றுக்கு தடைவிதித்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டொக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

அதன் பின்னர் கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவில், ‘அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக்-டொக் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவல்களை சேகரித்து மிரட்டவும், உளவு பார்க்கவும் இந்த செயலியை சீனாவால் பயன்படுத்த முடியும் என்பதால், 45 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு அதை விற்க வேண்டும்’ எனக் காலக் கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டிக்-டொக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில் ஜனாதிபதி ட்ரம்ப், வர்த்தகச் செயலாளர் வில்பர் ரோஸ் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ட்ரம்பின் தீவிர நடவடிக்கையை நியாயப்படுத்த எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அமெரிக்க அதிகாரிகள் நிறுவனத்தின் உரிமைகளை பறிப்பதாக டிக்-டொக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker