இலங்கை

சீனாவில் இருந்து உரத்தைக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடல்!

சீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல், உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது.

அதன்படி, குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதம் சீன உரத்தை ஏற்றிய கப்பலை நாட்டுக்குக்கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

குறித்த கப்பலில் 8 ஆயிரம் மெற்றிக் டன் உரம் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker