உலகிலேயே மிக நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை

உலகிலேயே முதல் முறையாக மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவை இன்று (சனிக்கிழமை) முதல் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக இந்த விமான சேவையில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்கவுள்ளன.
அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளாதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகளின் அனுபவத்தை தொடர்ந்து குவாண்டாஸ் போயிங் 787 விமானங்களின் சேவை 2022 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.