இலண்டன் சிவன் அருள் அறக்கட்டளையானது சிவன் அருள் பவுண்டேசன் ஊடாக 132 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள்…

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் அலிக்கம்பை தேவகிராம ஒட்டுமொத்த மக்களும் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் அக்குடும்பங்களுக்கான நிவாரணப்பணியை மேற்கொள்ளுமாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் பல அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைவாக இலண்டன் சிவன் அருள் அறக்கட்டளையானது சிவன் அருள் பவுண்டேசன் ஊடாக 132 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை இன்று வழங்கி வைத்தது.
இதற்கமைவாக வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்று முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன.
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் ஏற்பாட்டில் சமூக நேயன் வே.வாமதேவனின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிவாரணப் பொருட்களை அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினர் முன்னின்று வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் சு.சுஜித்மதுசங்க சிவன் அருள் பவுண்டேசன் ஸ்தாபகர் வே.வாமதேவன் உட்பட அம்மன் மகளின் பவுண்டேசன் உறுப்பினர்கள் அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.