ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இடைத்தங்கல் முகாமில்!

ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் மக்கள் அம்மன்- Help ஆரம்ப பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளன.
மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கியுள்ளதால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களுக்கான உதவிகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.