இலங்கைவிளையாட்டு

IPL இல் விளையாடும் இலங்கை வீரர்கள் நாடு திரும்பி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும், நாட்டுக்கு வந்து தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கோரியுள்ளார்.

ஐ.பி.எல் இல் விளையாடும் சில வீரர்கள், தங்களின் நாட்டைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்பது தமக்கு தெரியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிரிக்கெட் சபையின் கீழ் பணியாற்றுகின்றனர்.

அவர்கள் தங்களின் தொழிலைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வீரர்களை நீங்கள் நன்கு அறீவீர்கள் என நான் நம்புகிறேன். அவர்களைக் குறிப்பிட நான் விரும்பவில்லை.

ஆனால், அவர்கள் தங்களின் தொழிலை ஒரு வாரத்திற்கு கைவிட்டு வந்து போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker