இலங்கை
Trending

தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் !

உள்ளூராட்சித் தேர்தல் சட்டம் மற்றும் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இதன் மற்றொரு கட்டம் இன்று (04) நடைபெற உள்ளது.
இதில் இரத்தினபுரியைச் சேர்ந்த சிரேஷ் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கூடுதலாக, தேர்தல் தகராறுகளைத் தீர்ப்பது குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் பல கட்டங்கள் சமீபத்தில் பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டதாகவும், இந்த திட்டங்கள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்முறை உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவான முறைப்பாடுகள் குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் (03) தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker