ரி-20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தற்போது ரி-20 உலகக்கிண்ணத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாடுகளும் ரி-20 தொடர்களை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், ஐ.சி.சி.யின் ரி-20 துடுப்பாட்ட வீரர்களிளன் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியல்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்…
இந்த பட்டியலில், பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்தும் 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார்.
அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ், 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டாவிட் மாலன் 782 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நியூஸிலாந்தின் கொலின் முன்ரோ 780 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், 766 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடரில், இரண்டு அரைசதம் அடித்த இந்திய வீரரான லோகேஷ் ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி, 734 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் எவீல் லீவிஸ் ஏழு இடங்கள் ஏற்றம் கண்டு 699 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சஸாய் இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 692 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவின் ரோஹித் சர்மா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 686 புள்ளிகளுடன் ஓன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-20 தொடரில், முதல் போட்டியிலும், மூன்றாவது போட்டியிலும் அரைசதம் அடித்த இந்திய அணியின் விராட் கோஹ்லி, 15ஆவது இடத்தில் இருந்து 685 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.