இலங்கை
சி.வி.தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படுகின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கையொப்பமிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் மற்றும் கட்சிகள் அமைப்புக்கள் குறித்தான முழுமையான விபரங்களையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையில் ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.