இலங்கை
திருக்கோவில் குடிநிலம் பகுதியை சேர்ந்த இளைஞன் விபத்தில் பலி

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குடிநிலம் பகுதில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (2023/09/16) மாலை ஏற்பட்ட பலத்த காற்றினால் வேகக்கட்டுபாட்டை இழந்து வயல்வெளியில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் திருக்கோவில் குடிநிலம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய தர்மராசா நிதர்ஷன் எனும் இளைஞன் பலியாகியுள்ளார்.
இவ் விபத்துபற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜே.கே.யதுர்ஷன்