உலகம்

அமேசன் காட்டினை அச்சுறுத்தும் தீ – பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசன் மழைக்காடுகள்.

பிரேசில் மற்றும் கொலம்பியாவிற்கு இடைப்பட்ட பகுதியில் காணப்படும் இந்த காடுகள், உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.

அமேசன் காட்டின் ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து சில தினங்களாக காடு முழுவதும் பரவி வருகிறது.

இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறன. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய பிரேசில் ஜனாதிபதி, ஜேய்ர் போல்சனோரோ, அமேசன் காடுகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் தான் வேண்டுமென்றே தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக நல ஆர்வலர்கள், அரசின் சுற்றுச்சூழல் எதிர்ப்பு கொள்கையால் அரசு ஆதரவாளர்களே அமேசன் காடுகளுக்கு தீ வைத்து விபத்தை ஏற்படுத்த தூண்டுவதாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker