இலங்கை

aflatoxin திரிபோஷா தாய்மார்களை சென்றடைந்ததா?

கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் திரிபோஷாவில் aflatoxin என்ற நச்சுத்தன்மை குறிப்பிட்ட அளவிலும் பார்க்க அதிகளவில் அடங்கியிருப்பதாக நாகொட தேசிய சுகாதார ஆய்வு நிலைய 6 அறிக்கையில் இதற்கு முன்னர் உறுதி செய்யப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் இந்த அறிக்கையை உறுதி செய்து தெரிவிக்கையில் திரிபோஷாவில் aflatoxin நச்சு அடங்கியிருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டது என்றார்.

இருப்பினும், இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவிக்கையில், aflatoxin அடங்கியிருப்பதாக அடையாளம் காணப்பட்ட திரிபோஷா தாய்மார்களை சென்றடையவில்லை. இவ்வாறான அடிப்படையில் வழங்கப்பட்ட திரிபோஷாவில் aflatoxin நச்சுத்தன்மை அடங்கியிருப்பதாக முதல் முறையாக ஊடகங்களுக்கு தெரிவித்த , பொது சுகாதார பரிசோதகர்களின் தலைவர் உபுல் ரோஹண இன்று (23) சுகாதார அமைச்சின் விசேட சுற்றிவளைப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இவர் தெரிவித்திருந்த கூற்று தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker