இலங்கை

சாகாமம் கிராமத்தில் அடையாளம் காணப்படாத வயோதிபரின் சடலம் மீட்பு!

வி.சுகிர்தகுமார்

 அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் அடையாளம் காணப்படாத சுமார் 70வது வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை (11) மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

சடலமானது காயங்களுடன் குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று தொலையில் காணப்பட்ட நிலையில் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் மற்றும் திருக்கோவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்க்கப்பட்டவர்; திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்தவர் இல்லையென்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சடலம் சட்ட நடவடிக்கைகளுக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன்; குறி;த்த நபரை அடையாளம் காண முடியாது இருப்பதாகவும் உறவினர்கள் அல்லது அறிந்தவர்கள் சடலத்தை அடையாளம் காண்பதற்கு உதவுமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவரின் சாரம் சடலம் இருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில்; காணப்பட்டதுடன் கை கால் பகுதிகளில் காயங்களும் இருப்பதுவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிராம உத்தியோகத்ததின் ஒத்துழைப்போடு; திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker