இலங்கை

வீரமுனை கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பினர் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு….

வி.சுகிர்தகுமார்

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் பின்தங்கிய பல எல்லைக் கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்கள்  வாழ்வாதார ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறு நெருக்கடிகளை சந்தித்துவரும் கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்களளுக்கு  தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் முடிந்தவரை உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்காக ஜேர்மன் நாட்டின் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் மற்றும் ஜேர்மன் சொப்ட் இளைஞர் அமைப்பின் நிதி அனுசரணையில் பெறப்பட்ட 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பினர் இன்று வழங்கி வைத்தனர்.

வீரமுனையை சேர்ந்த உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.பரமதயாளன் ஒருங்கிணைப்பில் கிராம உத்தியோகத்தர்களான ஏ.பிரதீபன், எம்.உதயராஜன், எஸ்.திருச்செல்வம், கே.பிரகாஸ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற நிவாரணப்பணியில் அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பினர் கலந்து கொண்டு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.

வீரமுனை 01 கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை பேணும் வகையில் இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் பணியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பெண்கள் கலந்து கொண்டு நிவாரணப்பொதியை பெற்றுக்கொண்டதுடன் நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker