குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி! -டெஸ்லா அறிவிப்பு

உலகப் புகழ் பெற்ற மின்சாரக் கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் குறைந்த விலையில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதைய மின்சார வாகன சந்தையில் அதிகரிக்கும் போட்டியினால், டெஸ்லா விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், நிறுவனர் எலான் மஸ்க் என்பவரின் அரசியல் கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாகவும், நிறுவனத்தின் மொத்த வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில், டெஸ்லாவின் வருவாய் 22.5 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துவிட்டது என்பது இதற்கான முக்கிய சான்றாகும்.
இதற்கு பதிலாக, டெஸ்லா நிறுவனம் தனது நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், குறைந்த விலையில் மின்சார கார்களை விற்பனை செய்து வியாபாரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்க் மற்றும் அவரது டெஸ்லா குழுவின் எதிர்காலப் படிகள், மின்சார வாகனங்கள் சந்தையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.