இலங்கை

மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவு வரும் என்கின்றார் சுமந்திரன் எம்.பி.!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு பொறுப்புக் கூறலை முன்னெடுக்கவேண்டும் என்ற பிரேரணையைத் தீர்மானமாகநிறைவேற்றிய நாடுகளுடன்நாம் இப்போதே பேச்சுகளைஆரம்பித்துள்ளோம். இந்த நகர்வு அடுத்த ஆண்டு மார்ச்மாதத்தில் நல்லதொரு முடிவைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம்.

– இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.எ. சுமந்திரன்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜெனிவா விவகாரத்தில் நாம் ஏற்கனவே சில முன்னெடுப்புகளை கையாண்டுள்ளோம். இதில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் எமக்கு அனுசரணை யாக இருக்கின்ற நாடுகளின் கூட்டமொன்று உள்ளது. இந்தக் குழுவுக்கு இப்போது தலைமை தாங்குவது பிரிட்டன். ஆகவே அவர்கள்தான் இப்போது இதற் கொரு வடிவம் கொடுக்கவேண் டும். அந்த வகையில் பிரிட்டன் தூதுவரை அண்மையில் சந்தித்து இந்த விடயம் குறித்து ஒன்றரை மணித்தியாலத்துக்கும் அதிகமா கப்பேசினேன்.வருகின்ற சிலநாள் களில் மேலும் சிலருடன் பேச் சுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆகவே எழுந்துள்ள புதிய சூழ்நிலைசம்பந்தமாக இப்போது பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போதே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். இது மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவைகொண்டுவரும் என எதிர் பார்க்கிறோம். பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசு தீர் மானங்களை எதிர்க்கவில்லை. சிலஆரோக்கியமான நகர்வுகளை அவர்கள் முன்னெடுத்தனர்.

பொறுப்புக்கூறல் விடயத்தைத் தவிர்த்து செயற்பட முடியாது. பொறுப்புக்கூறல் என்பது எல்லா அரசுகளுக்கும் இருக்கின்ற பொறுப்பாகும். அதனைத் தட்டி கழிக்கவே முடியாது. இந்தப் புதிய அரசு வடக்கு – கிழக்கில் எமது மக்களை அடையாளப் படுத்தி அபிவிருத்தி வேலைத்திட் டங்களைச் செய்தால் அதனை நாம் ஆதரிப்போம். அதற்காக, பொறுப்புக்கூறல் மற்றும் அரசி யல் தீர்வு விடயத்தில் நாம் கண்ணைமூடிச்செயற்படுவதாக அர்த்தமில்லை . இந்தவிடயத்தில் எமது எதிர்ப்பையும் அழுத்தங்களை யும் முழுமையாக நாம் பிரயோ கிப்போம் – என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker