இலங்கை

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் “வெற்றிக்கான நெறியாள்கை” விழிப்பூட்டல் கருத்தரங்கு…..

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் “வெற்றிக்கான நெறியாள்கை” எனும் தலைப்பில் அண்மையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் கற்கும் மாணவர்களுக்காக பரீட்சைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது சம்பந்தமான ஓர் விழிப்பூட்டல் கருத்தரங்கு இன்று (08) நடைபெற்றது.

கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் திருமதி ரவிலேகா நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றதுடன். நிகழ்வில் பிரபல மருத்துவத்துறை பேராசிரியர் கலாநிதி மார்க்கண்டு திருக்குமார் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்.

இக் கருத்தரங்கிற்கான சகல ஏற்பாடுகளையும் ‘கல்வி மற்றும் சமூக அபிவிருத்திச் சங்கம்’ (EASDAA-83) மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் ஏற்பாட்டாளர்களால் வளவாளருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker