இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் கற்றல் மற்றும் குடிநீர் சுத்திக்கரிப்பு உபகரணம் வழங்கும் நிகழ்வு…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இ. த. க.வித்தியாலயம், நெடுங்கேனி மு/தண்டுவான் அ. த. க. பாடசாலைகளில் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் நிகழ்வானது இரு பாடசாலையின் அதிபர்களான திருமதி. வே. நித்தியகலா மற்றும் திரு. கு. பஞ்சலிங்கம் அதிபர்களின் தலைமையில் (14) காலை 10.00 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் கிராம சேவகர் திருமதி.லலிதா நிவேகாந்தன்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.கி. ஸ்ரீராமசுந்தரம், உறுப்பினர் திரு. த. நிசாந்தான் மேலும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இன் நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான சி.காந்தன், கோ.சிவானந்தன், பெ.விவேகானந்தன், எஸ்.சனாதனன் ஆகியயோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக 300ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் குடிநீரில் அதிகமான கல்சியம் காணப்படுவதினால் அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியால் பாடசாலை மாணவர்கள் குடிப்பதற்கான உகந்த நீர் இல்லை என சான்றிதழ் வழங்கியிருந்தார் அதன் அடிப்படையில் மாணவர்கள் குடிப்பதற்கான நீரினை பெறுவதற்கு இணைந்த கரங்கள் அமைப்பிடம் பாடசாலை அதிபர் மற்றும் சமுகத்தினால் உதவி கொரப்பட்டது.

இதன் அடிப்படையில் இணைந்த கரங்கள் அமைப்பின் நன்கொடையாளர் இன் நிகழ்விற்கான நிதி அனுசரணையினை வழங்கியிருந்தார். அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ராஜ்பவன் உணவக ஊரிமையாளர் திரு. ஜெயராஜ் விஸ்வலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker