ஆயித்தியமலை, கரவெட்டியாறு பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….

இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்க்கு கல்வி வலயத்திற்க்கு உற்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கரவெட்டியாறு விஜிதா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் (84) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வானது மட்டக்களப்பு ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு. துரைச்சாமி வித்தியானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இன் நிகழ்வில் கிராம அபிவிருத்தி தலைவர் திரு. வி.வசந்தராசா, பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எஸ். கலைவாணி, ஆசிரியர்களான திரு. எஸ். மதுசுதன், திரு. எஸ். சதகுகன், திருமதி. இ. கேதிஸ்வரி, திருமதி. N. விஜய அனிதா, திருமதி. எஸ்.செல்வேந்திரா ஆகியோர் மற்றும் கரவெட்டியாறு விஜிதா வித்தியாலய பாடசாலை ஆசிரியர்களான திருமதி. எஸ்.டனுஸ்கா, வினோதா ஆகிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இன் நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் இணைந்த கரங்கள் உறுப்பினர்களாகிய திரு.லோ.கஜரூபன், திரு.எஸ்.காந்தன், திரு.சி.துலக்சன்,திரு. தெ.சிருஸ்காந், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.