இலங்கை

காரைதீவு பிரதேச சபை வீதி ஒன்றிற்கு நாவலர் பெருமானின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் “நாவலர் வீதி” என பெயர் சூட்ட சபையில் தீர்மானம்!

இலங்கை அரசின் அங்கீகாரத்தோடு இவ்வருடம் நாவலர் ஆண்டு எனப் பிரகடனம் செய்யப்பட்டதோடு நாவலர் பெருமான் பிறந்த 200 வது ஜனன ஆண்டிலே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமானது பல்வேறுபட்ட நாவலர் பெருமானின் அற்பணிப்பான செயற்பாடுகளை நீளநினையும் வகையில் பல்வேறு”செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளது.

எதிர்வரும் 14.12.2022 தொடக்கம் 18.12.2022 வரை நாவலர் மாநாடு வடக்கிலே முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் சுவாமி விபுலாநந்தர் பிறந்த காரைதீவு மண்ணில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு கி.ஜெயசிறில் அவர்களின் தலமையில் நாவலர் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் வீதி ஒன்றிற்கு நாவலர் பெருமானின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் “நாவலர் வீதி” என பெயர் சூட்ட சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன்.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சி.ஜெகராஜன் அவர்களினால் நாவலர் திருவுருவப்படம் கெளரவ தவிசாளருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் இதில் நாவலர் பெருமானின் நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு வி.ரி.சகாதேவராஜா மற்றும் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி சி.சிவலோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி உதகதியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker