இலங்கை

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 5g 750mg கெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபரை நேற்று (03) அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் விசேட போதை ஒழிப்பு பிரிவின் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

போதைப்பொருள் பயன்பாடு இடம்பெற்றுவருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் விசேட போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் கொண்ட 15 பேர் கொண்ட குழுவின் சுற்றிவளைப்பில் அக்கரைப்பற்று 05ம் பிரிவை சேர்ந்த 47 வயதை உடைய கெரோயின் விற்பனை செய்வதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரிடம் இருந்து 5g 750mg கெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அதனை உடமையில் வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். இன்றைய தினம் (04) நீதி மன்றில் ஆயர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த கால அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற களவு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker