இலங்கை

லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பு, இலங்கை நலிவுற்றோர் நலன்காப்பு நிதியம் இணைந்து பசறை வலய 110 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

பசறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பிந்தங்கிய 110 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பதுளை பிரன்லி சிப் அமைப்பின் தலைவர் எஸ்.யசோதராஜன் அவர்களின் தலைமையில் பசறை தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதிகளாக லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வி. கணேசமூர்த்தி அவர்களும், நலிவுற்றோர் நலன்காப்பு நிதியத்தின் செயலாளர் நாயகமும் மற்றும் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் செயலாளருமான செ.ராமகிருஷ்ணன் அவர்களும், திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதித் தலைவரும் நிதிப் பணிப்பாளரும் மற்றும் மன்னார் நகரசபை உறுப்பினருமான சு. பிருந்தாபனநாதன் அவர்களும், விசேட அதிதிகளாக வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் மோகனோஸ்வரன் அவர்களும்,

இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும், பசறை தேசிய கல்லூரியின் அதிபர் கே.எம்.சீ.பிரபாகரன் அவர்களும் கோயில்குளம் GTM பாடசாலையின் தலைவரும் நலிவுற்றோர் நலன்காப்பு நிதியத்தின் உறுப்பினருமாகிய அ. சூரியகுமார் அவர்களும், சமூக நலன்விரும்பிகளான ராஜ்குமார் அவர்களும், பூபாலன் அவர்களும் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரன்லி சிப் பௌன்டேசனின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாணவர்களும் தலா ரூபா 4000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கு லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பு மற்றும் இலங்கை நலிவுற்றோர் நலன்காப்பு நிதியம் இணைந்து நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பல சேவைகளைச் செய்து வரும் லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பையும் பாராட்டி கௌரவித்தனர். இந் நிகழ்வினை பதுளை பிரன்லி சிப் அமைப்பினர் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker