இலங்கை

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தின் அனுசரனையில் இரத்ததான முகாம்….

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தின் அனுசரனையில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு இன்றைய தினம் (20.11.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் இருந்து சத்ய சாயி சேவா நிலையத்தில் சிறந்த முறையில் பிரதேச பல கொடையாளர்களின் வருகையுடன் இடம்பெற்றுவருகின்றது.

குறித்த இரத்ததான முகாம் இன்று மதியம் 01.00 மணி வரை சத்ய சாயி சேவா நிலையத்தில் இடம்பெற இருப்பதுடன் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் சத்ய சாயி சேவா நிலையத்திற்கு வருகை தருவதன் மூலம் இலகுவான முறையில் இரத்த தானம் செய்யமுடியும்.

இரத்த தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள் சில…

1. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.

2. இலவசமாக குருதிப் பரிசோதனை செய்யப்பட்டு நோய்நிலைமைகள் அறியத்தரப்படுவதனால் பல நோய்களை முன்கூட்டியே தடுக்கலாம்.

3. உடலின் மேலதிக கலோரிகள் குறைவடையும்.

4. இதயம் மற்றும் ஏனைய அங்கங்களின் நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.

5. மன அழுத்தம் குறைவடையும்.

6. நீங்கள் வழங்கும் இரத்தம் ஓர் நாள் உங்களுக்கோ உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ பயன்படலாம். அத்தோடு உங்களால் 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker