இலங்கை

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் தீபாவளி தினத்தன்று விடுதலை-டக்ளஸ்

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை “சில மாதங்களுக்கு முன்னர், எதிர்கால ஜனாதிபதி பற்றிய கேள்விகள் நாட்டில் தோன்றிய போது, பலரும் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே நாட்டை வழிநடத்தப் பொருத்தமானவர் என்பதை நாம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker