இலங்கை

3அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வவுனியா மேல் நீதிமன்றம் நீராகரிப்பு!

அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் தர்சன், சுலக்சன், திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகளான மா. இளஞ்செழியன், இராமகமலன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே 2013 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு தொடர்பான தொடர் விளக்கத்திற்காக எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

குறித்த அரசியல் கைதி களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஆஜராகியிருந்தார்.
குறித்த அரசியல் கைதிகளுக்கு கடந்த சில மதங்களுக்கு முன்னர் அமைச்சர் ரோகான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சர்ச்சை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker