இலங்கை

உலக வங்கி, இலங்கைக்கு அவசர நிவாரண உதவி

இலங்கைக்கு அவசர நிவாரண உதவியை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதன் கீழ் முதலாவதாக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

அந்த நிதியினை உலக வங்கியின் கொவிட் சுகாதார செயற்றிட்டம் வழங்கயுள்ளது. உணவு பயிர் உற்பத்திற்கான விதைகள், உரம் என்பவற்றைப் பெறுவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலையில் வறுமைக்கு உட்பட்டவர்கள், அனர்த்த நிலையை எதிர்கொண்டுள்ளவர்களை பாதுகாப்பதை முக்கிய பொறுப்பாக கருதுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker