இலங்கை

விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு: திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில்

ஜே.கே.யதுர்ஷன்

இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் இவ் வருடத்திற்கான குழு மற்றும் சுவட்டு விளையாட்டு போட்டி நிகழ்வுகளின் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்றைய தினம் (24) திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் திருக்கோவில் பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி,திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன், திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜா மற்றும் கழக ஒருங்கினைப்பாளர் ரி. நிசாந்தன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாணவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் , இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்,மற்றும் இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இதன் வெற்றி கிண்ணங்களுக்கான நிதி அனுசரனை AMI foundation akkaraipattu and jey group pvt ஆகிய நிறுவனங்கள் இக் கிண்ணங்களுக்கான நிதியினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker