இலங்கை
சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் அடிக்கல் வைத்தல் நிகழ்வு இன்று…

சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் (22) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரியநீலாவணை 1ஏ கிராமத்தில் வசிக்கும் ஓர் குடும்பத்திற்கு மூன்று அரை இலட்சம் (Rs.350,000/-) பெறுமதியில் வீடு ஒன்றை அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றைய தினம் (22) நடைபெற்றுள்ளது. இதற்கான நிதி அனுசரணையை இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், இந்துசமய கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.ஜெயராஜ், சிவனருள் செயலாளர் திரு.வே.வாமதேவன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.